tamilnadu

img

மேற்கு வங்காளத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு உள்ளூர் ரயில்கள் இயக்கம் 

மேற்கு வங்காளத்தில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயின் எல்லைகளுக்கு உட்பட்ட உள்ளூர் ரயில் சேவைகள் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று காலை துவங்கியுள்ளது. கொரோனா காரணத்தால் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா காரணமாக ஏழு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் ரயில்கள் புதனன்று மீண்டும் துவங்கியுள்ளது. கொரோனா காரணமாக கடுமையான விழிப்புணர்வுகளை பயணிகளுக்கு அளிக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. 

கொரோனாவிற்கு முந்தைய காலங்களில் வழக்கமான ரயில்களை போலவே இஎம்யு ரயில்களும், சாக்-எ-பிளாக் ஆகிய ரயில்களுக்கு பயணிகளின் அதிகமாக இருந்தது. தற்போது, குறைந்துள்ளது. மீண்டும்  படிப்படியாக  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அளவில், கட்டணமுள்ள ரயில்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். கொரோனா விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முககவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டு பயணிகளுக்கு இடையில் தூரம் இருக்க குறுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ரயில்வே புதன்கிழமை முதல் சீல்தா பிரிவில் 413 புறநகர் ரயில்களையும், ஹவுரா பிரிவில் 202 ரயில்களையும் இயக்கப்படுகிறது. ரயில்களின் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக, 177 நேர அட்டவணையில், 148 சேவைகள் அதிகபட்ச நேரங்களில் இயக்கப்படுகிறது. தென்கிழக்கு ரயில்வே புதன்கிழமை முதல் 81 ரயில்கள்  தினசரி இயக்கி வருகிறது.